தமிழகம் ஈரோட்டில் தடுப்பூசிக்காக இரவு முழுவதும் காத்திருந்த மக்கள்!: குறிப்பிட்ட அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பலர் ஏமாற்றம்..!! Jun 17, 2021 ஈரோட்டு ஈரோடு: ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிக்காக இரவு முழுவதும் காத்திருந்த பொதுமக்களுக்கு காலையில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட அளவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்து திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு 19,000 தடுப்பூசிகள் வரப்பெற்றதை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது ஈரோடு மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்களில் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் நேற்று இரவு 9 மணி முதல் பொதுமக்கள் திரண்டு காத்திருந்தனர். இரவு முழுவதும் காத்திருந்தவர்களுக்கு காலை 6 மணிக்கு பிறகு டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பல மணி நேரமாக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகைய நிலையில், மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை: வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்: அன்புமணி
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
கடலூரில் தேர்தலன்று இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்