முக்கிய செய்தி சென்னை அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி!: சசிகலாவு-க்கு எதிராக அதிமுக கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!! Jun 17, 2021 அஇஅதிமுக சசிகலா சென்னை: அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை கண்டிப்பதாக சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக-வை அபகரிக்க சசிகலா சூழ்ச்சி செய்வதாக கூறி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுகவினர் 16 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் உரையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் அதிமுகவினருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. எனவே சசிகலாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக-வில் உறுப்பினராக கூட சசிகலாவுக்கு தகுதி இல்லை என சி.வி.சண்முகம் தீர்மானத்தை வாசித்தார். சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்திலும் சசிகலாவிற்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா பேசி வருவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிமுக சாதி கட்சியாக செயல்படுவதாக சசிகலா குற்றம்சாட்டியதுடன், தொண்டர்கள் நீக்கப்படுவதை பார்த்து சும்மா இருக்க மாட்டேன் என ஆவேசமாக கூறியிருந்தார். இப்படி சசிகலா தரப்பும் - எடப்பாடி பழனிசாமி தரப்பும் பகிரங்கமாகவே மோதி வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு