முக்கிய செய்தி இந்தியா பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிட்டு வழங்கப்படும்!: உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம்..!! Jun 17, 2021 டெல்லி: பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிட்டு வழங்கப்படும் என்பது பற்றி சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நிபுணர் குழுவை அமைத்து பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்திருக்கிறது. அதன்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களது 10 மற்றும் 11ம் வகுப்புகளில் இருக்கும் 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் டூ யூனிட் தேர்வுகள், பருவ தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. அவ்வகையில் 10 மற்றும் 11ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. கூறியிருக்கிறது. மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள், கொரோனா குறைந்த பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக இருப்பேன் : தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் மோடி வரக்கூடாது என கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா?.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு; வரலாற்றில் முதன்முறையாக ரூ.51,000 கடந்த தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை: முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மொத்தம்- 1,749; நிராகரிப்பு -664; ஏற்பு-1085.! நாளை இறுதி பட்டியல் வெளியீடு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000 அதிகரிக்கும்… சுங்க கட்டணம் உயர்வால் லாரிகளுக்கு கூடுதல் செலவு: திரும்பப்பெற உரிமையாளர்கள் வலியுறுத்தல்
நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம்… பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!!
DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு: மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு நாட்கள் கெடு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!