சேலம்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டன தீர்மானத்திற்கு பிறகும் அதிமுகவினருடன் சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருவதால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆதரவாளர்களை தக்க வைக்க தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.