முக்கிய செய்தி சென்னை 13 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்; புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே Jun 17, 2021 தெற்கு ரயில்வே சென்னை: பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர்-ராமேசுவரம் தினசரி சிறப்பு ரயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். கொல்லம்-எழும்பூர் தினசரி சிறப்பு ரயில் (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும். எழும்பூர்-தூத்துக்குடி தினசரி சிறப்புரயில் (02693) தூத்துக்குடி ரயில் நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும். எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். திருநெல்வேலி-பாலக்காடு தினசரி சிறப்பு ரயில் (06791), திருப்பதி- ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு ரெயில் (06779) உள்பட 13 சிறப்பு ரெயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில்களில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தூத்துக்குடி-மைசூர் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும். ஜூன் 18-ந் தேதி முதல் ஒகா-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும். பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு ரயில்களின் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!