இந்தியா நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பரிதாப பலி!: எஞ்சியவர்கள் கதி? Jun 17, 2021 நேபால் காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பருவமழை காரணமாக இந்திராவதி மற்றும் மேலம்ஷீ ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பூடான் நாட்டில் மருத்துவ குணமுள்ள இலைகளை பறிக்க வனப்பகுதிக்குள் சென்றவர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். தலைநகர் தும்புவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் முகாம் ஒன்றில் இரவு தூங்கி கொண்டிருந்த போது உள்ளே புகுந்த வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. இதில் சிலரது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்