கொரோனா 2வது அலை; 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு, 30 பேர் உயிரிழப்பு: ICMR தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது. இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.  சதவீத அடிப்படையில் 28.7% பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டு உள்ளது. முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், 2வது அலையில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு சதவிகிதம் 5.7 ஆக  பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. இரண்டு அலைகளிலும் இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. 

Related Stories: