முக்கிய செய்தி உலகம் சீனா தன்னிச்சையாக உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் புறப்பட்டனர்!: விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என பெருமிதம்..!! Jun 17, 2021 விண்வெளி நிலையம் சீனா பெய்ஜிங்: சீனா சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மண்ணில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதை தாண்டி விண்ணில் ஆதிக்கம் செலுத்த வல்லரசுகள் தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. தியாஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மைய பகுதியை கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று சீனா விண்ணில் செலுத்தி இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து அதாவது மே 29ம் தேதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. முன்னதாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர். இதன் தொடர்ச்சியாக விண்வெளி வீரர்கள் அனைவரும் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஷென்ஜோ -12 விண்கலம் செலுத்தப்பட இருந்த ஜுகுவான் ஏவுதளத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தியதை அடுத்து அவர்கள் விண்கலத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பர். இந்த நடவடிக்கை விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என சீனா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி!!
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு