டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து, தமிழக ஆளுநரின் அனுமதியின் பேரில், அந்த பணியிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Related Stories: