சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த மே 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெங்களூரு ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.