மதுரை: கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி மதுரை எஸ்பிக்கு மெசேஜ் அனுப்பிய பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ் 2 படித்து வந்தார். இவரை தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். திருமணத்தை விரும்பாத மாணவி, படிக்கவேண்டும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட மாணவி, தன் தோழி ஒருவரின் ஆலோசனைப்படி, மதுரை எஸ்பி அலுவலக போன் எண்ணை வாங்கி, ‘‘நான் படிக்கணும். எனக்கு திருமணம் வேண்டாம். எப்படியாவது தடுத்து நிறுத்துங்க சார்’’ என்று செல்போனில் எஸ்பிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியுள்ளார்.