சிவகங்கை: சிவகங்கையில் 11 ஏக்கர் கோயில் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அபகரித்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை நகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கவுரி பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் சிவகங்கையில் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் அபகரித்துள்ளனர்.