திருச்சி: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில்களில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த ேபட்டி: சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், திருநீர்மலை முருகன் கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில் ஆகிய 5 கோயில்களில் ரோப்கார் அமைக்க முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இங்கு ரோப் கார் வசதி சாத்தியம். ரோப்கார் வசதி ஏற்படுத்த உலகளவில் டெண்டர் கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கோயில் விவகாரங்களில் திமுக அக்கறை செலுத்துவது சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளாரே என கேட்டபோது, ‘‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும்.