அகமதாபாத்: கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு உடலில் காந்த சக்தி ஏற்படுவதாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது குஜராத்தின் பனஸ்காந்தாவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இரண்டு தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்ட பாட்டிக்கும், பேரனுக்கும் உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘பலன்பூர் அடுத்த நவ்ஜீவன் பகுதியில் வசிக்கும் நவீன்பாய் என்பவர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சர்ட்டில் இருந்த நாணயங்கள் அவரது உடலில் ஒட்ட ஆரம்பித்தன.