முக்கிய செய்தி இந்தியா பாலியல் புகாரில் சிக்கி டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர நீதிமன்றம் அனுமதி..!! Jun 16, 2021 சிவசங்கர் பாபா தில்லி டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னைக்கு அழைத்து வர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. தொடர்ந்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென அங்கிருந்து தப்பியோடி டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உத்திரபிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காசியாபித்தில் சிவசங்கர் பாபாவை டி.எஸ்.பி. குணா தலைமையிலான தமிழக சிபிசிஐடி போலீசார் மடக்கிப்பிடித்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது சிவசங்கர் பாபா மொட்டை அடித்திருந்தார். அவரை தலைநகர் டெல்லியில் இருக்கின்ற மாவட்ட சாகெட் நீதிமன்ற நீதிபதி விபுல் சத்ருவார் முன்பு ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி இன்று இரவு 8 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலமாக சிவசங்கர் பாபா சென்னை அழைத்துவரப்படவிருக்கிறார்.
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை : தேர்தல் ஆணையம்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!