அண்ணாநகர்: சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என மகள் கூறியதால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததால் சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (22) என்பவர்தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.