சென்னை: அதிமுகவுக்கு யாரும் சாதி சாயம் பூச முடியாது என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்திருந்த சசிகலா கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஒவ்வொரு தொண்டரிடமும், தான் விரைவில் உங்களை சந்திக்க இருப்பதாகவும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் அரசியல் நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.