திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள காந்தல்லூர் பாம்பன்பாறை பகுதியை சேர்ந்தவர் ேஜாணி. அவரது மனைவி ராஜம்மா (69). அவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. ஜோணி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜம்மா தனியாக வசித்து வருகிறார். தனக்கு துணையாக ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த பகுதி புலிகள் நடமாடும் பகுதியாகும். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் உள்ள வாத்துகளை பிடிப்பதற்காக ஒரு புலி வந்தது. இதை தெரிந்துகொண்ட அந்த பகுதியினர் புலியை விரட்டினர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ராஜம்மா வளர்க்கும் நாய் பயங்கரமாக குரைத்தது.