சென்னை: பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளித்த முதலமைச்சருக்கு நன்றி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமது மகன் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று சிறை விதிகளில் தளர்வு அளித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து உத்தரவிட்டுளளர்.