முக்கிய செய்தி இந்தியா தட்டுப்பாடு எதிரொலி!: தமிழகத்தில் 1.41 லட்சம் பேர் 2வது டோஸ் போடவில்லை... ஐ.சி.எம்.ஆர்.நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! Jun 16, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டெல்லி: ஒன்றிய அரசு போதிய அளவில் தடுப்பூசி வழங்காத நிலையில் தமிழ்நாட்டில் தட்டுப்பாடு காரணமாக 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் குறிப்பிட்ட கால அளவிற்குள் கோவாக்சின் 2வது டோஸ் போடமுடியாமல் பரிதவிப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மாநில வாரியாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் மூலம் தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் குறிப்பிட்ட கால அளவிற்குள் கோவாக்சின் 2வது டோஸ் போட தவறி இருப்பது தெரியவந்துள்ளது. கோவாக்சின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 4 முதல் 6 வாரங்களில் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மே 2ம் தேதி கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் கடந்த 13ம் தேதிக்குள் 2வது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும். மே 2ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 408 பேர் கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டனர். அவர்கள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 589 பேர் மட்டுமே ஜூன் 13ம் தேதிக்குள் 2வது டோஸ் செலுத்திக்கொண்டனர். எஞ்சிய 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேர் 2வது டோஸ் போட தவறிவிட்டது தெரியவந்துள்ளது. அதே சமயம் 2வது டோஸ் செலுத்திக்கொள்ள மக்கள் தயாராக இருந்தும் ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசிகளை ஒதுக்காததே இந்த நிலைக்கு காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வரை தமிழக அரசிற்கு ஒன்றிய அரசு 16 லட்சத்து 82 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அவற்றில் 11 லட்சத்து 55 ஆயிரம் தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கும், 5 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் 2வது தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கும் போடப்பட்டுள்ளது.
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்