அரசியல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு!: கட்சி உடையும் சூழலால் மாயாவதி அதிர்ச்சி..!! Jun 16, 2021 பகுஜன் சமாஜ் மீ. அகிலேஷ் மாயாவதி லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே இருக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி உடையும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சியின் தலைவர் மாயாவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் தனி அணியாக செயல்பட இருப்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஒருவரான அஸ்லம் ரெய்னி கூறியிருக்கிறார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் லால்ஜி வர்மா தலைமையில் புதிய அணி இயங்கும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் தங்கள் அணியில் இணைய இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். சமாஜ் வாதி கட்சியில் இணைந்தால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் உறுதி அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சமாஜ் வாதி கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார்
அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி டோஸ்: தேர்தல் பணிகளில் சுணக்கம், பணத்தை சுருட்டி விட்டனர் என குற்றச்சாட்டு
தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என சீக்ரெட் மெசெஜ் அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம்: பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு புதிய விண்ணப்பம்