மாஸ்கோ : ரஷியாவின் 3வது மிகப்பெரிய நகரமான நோவோசிபிக்கில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள நோவோசிபிக் நகரில் எரிவாயு சேமிப்பு கிடங்கில் எரிவாயு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு டேங்க் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. அப்போது அங்கு இன்று இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.