சென்னை: ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நடக்கும் திட்டப்பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது, அரசு கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது என பல்வேறு பணிகள் நடக்கிறது. இதற்காக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு புதிய மாவட்டங்களுக்கான கலெக்டர் அலுவலகங்கள் கட்டும் பணி மற்றும் விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உட்பட 11 மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.