மும்பை: ஓட்டலில் பிறந்தநாள் பார்ட்டி நடத்திய தமிழ் பட நடிகை, போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்டார். தமிழில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த படம் மிருகா. இதில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஆகியோருடன் இணைந்து நடித்தவர் நைரா ஷா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து மும்பை ஜுஹு பகுதியிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். தடபுடலாக நடந்த இவ்விருந்தில், போதை பொருள் சப்ளை அதிகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதிக போதை மயக்கத்தில் இருந்த நைரா ஷா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் சுற்றிவளைத்தனர்.