புதுடெல்லி: ‘கல்வானில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்து ஓராண்டாகியும், கல்வானில் என்ன நடந்தது என்று இன்னும் தெரியவில்லை,’ என சோனியா, ராகுல் குற்றம் சாட்டி உள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி அஞ்சலி செலுத்தினார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூருவதில் நான், ஒரு நன்றியுள்ள தேசத்தில் சேர்கிறேன். இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன. இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது இந்த அரசாங்கம் கடமை,’ என்று கூறியுள்ளார்.