மதுரை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வெப்சைட்டில் பதிவேற்றக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், ஒய்.புதுப்பட்டியைச் சேர்ந்த அமுதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இலவச ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள தனியார் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மெட்ரிக் பள்ளிகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனால், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பலரது வாய்ப்புகள் பறிபோகிறது.