சென்னை: ஆடம்பரமான வரவேற்பில் தனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் பங்கேற்கு நிகழ்ச்சிகளில் பொன்னாடையை தவிர்த்து புத்தகங்களை வழங்குங்கள் என திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒன்றிணைவோம் வா’ ஊரடங்கு கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் இளைஞர் அணி செயலாளர் என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறேன். இந்த பயணம் எனக்கு உற்சாகத்தை தந்தாலும் சில இடங்களில் பட்டாசு வெடிப்பது, ப்ளக்ஸ் பேனர் வைப்பது, பொன்னாடை அணிவிப்பது, பூங்கொத்துகளை வழங்குவது, ஆடம்பரமான வரவேற்பு தருவது போன்ற செயல்களில் கட்சியினர் சிலர் ஈடுபடுகின்றனர். இவற்றில் துளியும் எனக்கு உடன்பாடில்லை. எனவே, நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடை, பூங்கொத்தை தவிர்த்துவிட்டு புத்தகங்களை வழங்குங்கள்.