தமிழகம் ஆண் தாயாக விளங்குகிறார்!: சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்த முதலமைச்சருக்கு முன்னாள் காவலர் நன்றி..!! Jun 15, 2021 முதல் அமைச்சர் திருச்சி: சாலைகளில் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் காவலர் கவி செல்வராணி நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்த கவி செல்வராணி, கலைஞருக்கு இரங்கற்பா வீடியோ வெளியிட்ட காரணத்தால் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டதை தொடர்ந்து தனது 21 ஆண்டு காவலர் பணியை துறந்தவர் ஆவார். இந்த நிலையில் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு கவி செல்வராணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட பாராட்டு மடலில், பெண் காவலர்களின் பிரச்சனைகளை விவரித்துள்ளார். அதில் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண் தாயாக விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் தாய் அன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என செல்வராணி கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியத்தை கண்டு வியந்திருப்பார்கள் எனவும் செல்வராணி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
7 நாட்களாக எங்கே பதுங்கி இருக்கிறது?: வனத்துறை விரித்த வலையில் சிக்காமல் போக்குக்காட்டும் சிறுத்தை..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்.22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்
இந்திய நாட்டுக்கே வழிகாட்டிடும் வகையில் மகளிர் உரிமை திட்டம் சமூக நீதி திட்டங்களில் ஒரு மாபெரும் முன்னோடித் திட்டம் இது: திமுக
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரிப் பேருந்து மோதி விபத்து; 6 வயது சிறுவன் உயிரிழப்பு…தந்தை படுகாயம்..!!
சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்வது குறித்து புகார் தந்தால் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு