சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியைகள் பட்டியலை சேகரிக்கிறது சிபிசிஐடி

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகளின் பட்டியலை சிபிசிஐடி சேகரித்து வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்காக டேராடூன் சென்றுள்ளனர். போக்சோ சட்டத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு உதவிய ஆசிரியைகள் யார் யார் என்பது தொடர்பான பட்டியலை சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர். மொத்தம் அந்த பள்ளியில் 73 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் இவருக்கு உதவியதாக ஏற்கனவே 2 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பெயர் பாரதி, மற்றொருவர் தீபா என்பவர் ஆவார்.

இவருக்கு உதவிய ஆசிரியைகள் யார் யார் என்ற விவரங்களை சேகரிக்கக்கூடிய பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். புகார் அளித்துள்ள மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த மாணவிகள் அளித்திருக்கக்கூடிய தகவல்களை மையமாக வைத்து அந்தந்த ஆசிரியைகளின் விவரங்களை முழுமையாக சிபிசிஐடி சேகரிக்கிறது. அவர்களும் இந்த விசாரணை வளையத்திற்குள் சிக்குகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான திட்டத்தையும் சிபிசிஐடி போலீசார் வகுத்துள்ளனர்.

Related Stories: