தமிழகம் திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது காவிரி நீர்!: அதிகாலையில் கல்லணையை வந்து சேரும் என எதிர்பார்ப்பு..!! Jun 15, 2021 திரிச்சி திருச்சி: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்த நிலையில் அதிகாலையில் தஞ்சை கல்லணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை முதல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்த தண்ணீர் அதிகாலையில் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறுவை சாகுபடிக்காக நாளை முதல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கின்றனர். இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பை ஒட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் வர்ணம் பூசப்பட்டு புது பொலிவோடு காட்சி அளிக்கின்றன. பாலத்தில் உள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜன், அகத்தியர், காவிரி அம்மன் சிலைகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் வரவேற்றனர். ஆற்றில் நெல் மணிகள் மற்றும் மலர்களை தூவி அவர்கள் வரவேற்றனர். முசிறி, தொட்டியம் தாலுகாவில் பாசனத்திற்கான முக்கிய வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தாலுகாக்களில் வடகரை வாய்க்கால், காட்டு வாய்க்கால், காட்டுப்புத்தூர் வாய்க்கால் ஆகியவை தூர்வாரும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வாய்க்காலில் உள்ள குப்பைகள், மரத்துண்டுகள், தேங்கி கிடக்கும் மணல் முகடுகள் அகற்றப்பட்டு கடைமடை வரை காவிரி நீர் செல்லும் வகையில் முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன.
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு