முக்கிய செய்தி சென்னை வரும் 17-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்; பொறுப்பேற்றபிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு Jun 15, 2021 பிரதமர் மோடி தில்லி கு. ஸ்டாலின் சென்னை: டெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி ஆகியவற்றை வலியுறுத்த உள்ளார். டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 18-ல் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார். டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை வரும் 17-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் நீட் தேர்வு விலக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை, கருப்பு பூஞ்சை மருந்தின் தேவை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, காவிரி பிரச்னை மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னைகள் என்பது போன்ற தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் முன்வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்