மதுரை: அனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல: உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனுமதியின்றி கட்டிய கட்டடங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைக்கு போதிய இடம் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என நீதிபதிகள் கூறியுள்ளார்.