×

இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் மீதான இந்திய நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் மீதான இந்திய நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகள் முடித்து வைக்கப்பட்டது. மஸிமிலியானோ லாதோர், சல்வதோர் ஜிரோன் ஆகியோர் மீதான விசாரணையை முடித்துவைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ல் கேரளா கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.


Tags : Supreme Court , The Supreme Court has concluded the proceedings in the Indian courts against 2 Italian sailors
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...