சென்னை வேகமெடுக்கும் கரும்பூஞ்சை நோய்!: நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகள் தர ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி கோரிக்கை..!! Jun 15, 2021 டாக்டர் வீராசாமி யூனியன் அரசு சென்னை: தமிழத்தில் வேகமாகும் பரவி வரும் கரும்பூஞ்சை நோயில் இருந்து மக்களை பாதுகாக்க நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவெற்றியூரில் தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 45 வயது சர்க்கரை நோயாளிக்கு, முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மதன்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவருடன் இணைந்து பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவரான கலாநிதி வீராசாமி, முக எலும்பு மற்றும் கண்ணில் அறுவை சிகிச்சை செய்தார். நோயின் தாக்கம் எலும்பு மற்றும் கண்ணில் அதிகம் பாதித்துள்ளதால் வலப்புற கண் முற்றிலும் அகற்றப்பட்டது. வேகமாகும் பரவி வரும் கரும்பூஞ்சை நோயில் இருந்து மக்களை பாதுகாக்க நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்று கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார். சென்னையில் அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வடசென்னையில் முதன்முறையாக தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சைக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டை கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணர், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு 30 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் சுவாசக்கோளாறு, மனசோர்வு மற்றும் இணை நோய்கள் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மையம் ஆகியவையையும் அவர்கள் திறந்து வைத்தனர்.
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு
சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு; பிற மாநிலங்களில் இருந்து தகவல் கிடைத்ததும் முடிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம் சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்: தென் சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி
வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி
வலது தொண்டை குருதிக்குழாயில் இளம்பெண்ணுக்கு புற்றுக்கட்டி வெற்றிகரமாக அகற்றம்: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஓட்டேரியில் வீதி வீதியாக சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மனோவுக்கு பிரசாரம்: மேட்டுப்பாளையம் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி
நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்
தேர்தல் பத்திரம் மூலம் பல கோடிகளை சுருட்டிவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜவிற்கு தகுதி கிடையது: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் காலை 11 மணிக்கு முன்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளரை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்