கரூர்: தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். நோய் தோற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை என கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்