சென்னை: சென்னை பூக்கடை காவல் நிலைய போலீஸ்காரர்கள் முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோர் கடந்த வாரம் இரவு பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு நகை கடையில் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணம் எண்ணிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார், சோதனைநடத்துவது போல் கல்லாவில் இருந்த 5 லட்சத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து பூக்கடை போலீசில் கடை உரிமையாளர் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தபோது, முஜிப்ரகுமான், சுஜின் ஆகியோர் பணத்தை திருடியதும், இவர்களுக்கு உடந்தையாக எஸ்ஐ கண்ணனும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முஜிப் ரகுமான், சுஜின் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.