தமிழகத்தில் ஒரே நாளில் 12,772 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் 828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 254 பேர் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,70,256 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12,772  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  25,561பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை 21,99,808 பேர் குணமடைந்துள்ளனர்.  254 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 29,801 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: