திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை அருகே விவசாய நிலத்தில் பெட்ரோலிய குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா வெண்டயம்பட்டி கிராம விளைநிலங்கள் வழியாக நாகை மாவட்டம் அரிமணத்திலிருந்து, திருச்சி மாவட்டம் வாளவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்ல எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஐஓசிஎல் நிர்வாக ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்டையம்பட்டி, ராயமுண்டான்பட்டி, நவலூர், சுரக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன வாகனங்களை சிறைபிடித்ததோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.