சபரிமலை கோயில் நடை திறப்பு: தரிசன அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளுக்காக ேநற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைகளுக்காக நேற்று (14ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடையை திறந்து தீபாராதனை நடத்தினார்.  நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெற வில்லை. இன்று (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை ஆனி மாத பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி இரவு 9 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இம்முறையும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

Related Stories: