சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் திமுக எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்படுகிறார். அவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏ.கே.எஸ்.விஜயன் (59), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் 3 முறை நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு திமுக ஒன்றிய துணை செயலாளராக, ஒன்றிய செயலாளராக இருந்தார்.