சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக பாமகவின் ஆதரவை எதிர்பார்த்து என்னை நீக்கியுள்ளார்கள் என்று வா.புகழேந்தி கூறியுள்ளார். சசிகலா ஆதரவில் இருந்து விலகிய பின், தொலைபேசியில் கூட நான் பேசியதில்லை. அதிமுகவில் இருந்து என்னை நீக்க பலமுரை முயற்சி செய்த இபிஎஸ், தற்போது அதை செய்திருக்கிறார் என வா.புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.