சென்னை: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அத்தகைய திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.