கோயம்பேடு மார்க்கெட்டில் 12,000 பேருக்கு தடுப்பூசி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த மாதம் வரை 4,742 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் முகாம்களை மாநகராட்சி அதிகரித்தது. நேற்றுவரை கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்தது. 75 ஆயிரம் பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories: