தமிழகம் கொரோனாவால் தவிக்கும் தொழிலாளர்களுக்காக இளம்பெண் நடத்தும் ஊரடங்கு முகாம்!: உடற்பயிற்சி, யோகா, சுயதொழில் என கரைபுரளும் உற்சாகம்..!! Jun 14, 2021 கொரோனா ஈரோடு: ஊரடங்கால் வேலை இழந்தும், ஊர்திரும்ப முடியாமலும் தவித்த தொழிலாளர்களை அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார் இளம்பெண் ஒருவர். அடிப்படை தேவையான உணவு, இருப்பிடம் மட்டுமின்றி உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வு ஆக்கும் மையமாகவும், தொழிற்பயிற்சி கூடமாகவும் இந்த முகாம் மாறி இருக்கிறது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு. ஊரடங்கால் முடங்கிய தொழில்கள். இதனால் நிர்கதியான தொழிலாளர்கள் என பொதுமுடக்கம் தொழிலாளர்களின் வாழ்க்கையை முடக்கிவிட்டது. இதிலும் ஊர்விட்டு ஊர்வந்து கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் நிலை தான் இன்னும் மோசம். இவ்வாறு ஈரோடு நகரில் நிர்கதியான 70 பேரை இளம்பெண் ஒருவர் தனது குழுவினருடன் இணைந்து அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து பராமரித்து வருகிறார். செவிலியர் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் மனிஷா, தாம் நடத்தி வரும் ஜீவிதம் அமைப்பை சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து கருங்கல்பாளையம் அரசு பள்ளியில், இந்த முகாமை நடத்தி வருகிறார். தன்னார்வலர்கள் வழங்கும் உதவியுடன், தொழிலாளர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தினமும் காலை, மாலை உடற்பயிற்சி, யோகாவும் கற்பிக்கப்படுகிறது. விளையாட்டுகளும், பாடல், ஆடல் நிகழ்ச்சிகளும் இவர்களின் மன கவலைக்கு மருந்தாக உள்ளது. தொழிலாளர்களில் தனித்திறமை கொண்ட கவிஞர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் அந்த முகாமிலேயே வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி கை தொழில் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு கூடை பின்னுவதற்கும், முகக்கவசம் தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை கொண்டு மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் முகக்கவசங்களை முன்கள பணியாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் இலவசமாக கொடுத்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் தவிக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்