பெரம்பூர்: சென்னையில் கொரோனா பரவலின் வீரியம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில வாகன ஓட்டிகள் மீண்டும் அதிகளவில் சாலைகளில் சுற்றிவருகின்றனர். தற்போது பலரும் ஹெல்மெட் அணிவதை மறந்து முகக்கவசம் மட்டுமே அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜா உத்தரவின் பேரில், வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.