இந்தியா புதுச்சேரியில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்..!! Jun 14, 2021 திமுக பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள் சம்பத், கென்னடி, செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். அப்போது தனியார் பள்ளி கட்டண கொள்ளையை கண்டித்தும், நீதிமன்றம் அறிவுறுத்திய கல்வி கட்டண முறையை அரசு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியர்கள் மத்தியில் பேசிய புதுச்சேரி திமுக சட்டமன்ற குழு தலைவர் ஆர்.சிவா, தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை முறையாக பின்பற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். புதுச்சேரியில் கொரோனா காலத்திலும் ஆன்லைன் வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்தி வருகின்றன. பேரிடர் காலத்திலும் அனைத்து பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என்று மிரட்டுவதாக புகார் எழுந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திமுக-வினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள் ஆதரவுடன் மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வேன்: கெஜ்ரிவால் உறுதி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவிஎம், விவிபேட் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் பெயர்களை வெளியிட மறுப்பு
யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல் தொகுதியில் துப்பாக்கிகளுடன் வந்து மக்களை மிரட்டிய நக்சலைட்டுகள்: கேரளாவில் பரபரப்பு வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு
தேர்தல் பத்திரங்கள் முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை