சென்னை ஆன்லைன் கேமில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாச பேச்சு!: யூ-டியூபர் மதன் வீடியோக்களை முடக்க யூ-டியூப், இன்ஸ்டாகிராமுக்கு போலீசார் பரிந்துரை..!! Jun 14, 2021 YouTube படவரி சென்னை: யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் மதன் என்ற யூ-டியூபர் பற்றி பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருந்தன. யூ-டியூபர் மதன், மதன் ட்ரிக்ஸ் சேனல் என்ற பெயரிலும், மதன் 18+ என்ற பெயரிலும் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களில் விளையாடும் போது அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையாடிக்கொண்டே ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசும் வீடியோக்களை யூ-டியூப் சேனலில் பதிவிட்டு வந்திருக்கிறார். இதில் சிறுவர்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் உள்ளிட்ட அனைவரையுமே ஆபாசமாக பேசும் வகையில் வீடியோ அமைந்துள்ளது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்களை அவரது யூ-டியூப் சேனலில் பதிவிட்டு வந்திருக்கிறார். இது விளையாடும் சிறுவர்களை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்து வருகிறது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பப்ஜி மதன் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் மதன் தலைமறைவானதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வி.வி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மதன் மாற்றி கொண்டு வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மதனின் வீடியோக்களை பார்த்து பல சிறுவர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருப்பதால் வீடியோக்களை முடக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து போலீசார் யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர். அதில் மதன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். அதன்படி இன்று அல்லது நாளை அவரது பக்கம் முடக்க வாய்ப்பிருப்பதாக காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக அவரை பிடித்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அதுக்குள்ள சட்டமன்ற தேர்தலுக்கு போயிட்டாங்க தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அன்புமணியா – அண்ணாமலையா? கொடுங்கையூர் நிகழ்ச்சியில் பாமக-பாஜ காரசார விவாதம்
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு விடுவிக்ககோரிய மனு மீது மீண்டும் வாதிட கோரிக்கை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரி ஏரியின் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்வதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல்
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்