முக்கிய செய்தி தமிழகம் பெருகும் கள்ளச்சாராயம்!: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..!! Jun 14, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காரைக்குடி: மதுக்கடைகள் இல்லையென்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால் கள்ளசாராயத்தின் புழக்கம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் புகை பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம் மூலம் புகைபிடிக்கும் பழக்கம் குறைந்து இருப்பதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மதுக்கடைகளை திறந்தாலும் மது குடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது மூலம் மதுபழக்கத்தை ஒழுக்க முயலலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது உள்ள சூழலில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வே கட்டுமான பொருட்கள் உட்பட அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னதாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ப.சிதம்பரம் திறந்துவைத்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியை இருக்கையில் அமர வைத்ததுடன் வாசலில் மரக் கன்றையும் ப.சிதம்பரம் நட்டுவைத்தார்.
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு
எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே பேச்சு