போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2 வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது என கூறினார். ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளது என தெரிவித்தார்.  பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என கூறினார். போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என கூறினார். டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும் என கூறினார். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும் என கூறினார். பொதுபோக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும்; பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது என கூறினார். 

Related Stories: