சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி பொதுமக்கள் சார்பில் 22ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி ஊரடங்கை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் அழைத்துச் சென்று தாக்கி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு பென்னிக்ஸ் 21ம்தேதி இரவும், ஜெயராஜ் 22ம் தேதி காலையும் உயிரிழந்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து சிபிசிஐடி மற்றும் சிபிஐ போலீசார் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.